Related posts

Breaking News

Baahubali 2:The Conclusion


காலையில் இருந்து பாசிட்டிவ் கமண்டுகளாக வரவே இரவு காட்சிக்கு விரைந்தோடி விட்டேன்.போன முறை போலல்லாது திரைக்கதையில் சற்றே அதிக கவனம் செலுத்தியிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு சென்றேன்.விளைவு...விரிவாகப் பார்ப்போம். 

தந்தையை சதி செய்து கொன்றவர்களை வீழ்த்தி மகன் அரியாசனத்தில்  ஏறினானா என்பதுதான் பாகுபலி இருபாகங்களினதும் மொத்த ஒன்லைன். 

சென்ற பாகம் முடிந்த இடத்தில் இருந்து தொடங்குகிறது கதை.அங்கே சிவுடுவுக்கு இருந்தது போலவே இங்கே பாகுபலிக்கும் மாபெரும் ஓப்பனிங் சீன் ஒன்றுள்ளது.அதன் பிறகு கண்டபடி அலைபாயும் கதை இடைவேளைக்கு முன்னர் உள்ள காட்சியில்தான் வந்து செட் ஆகிறது.அதுவரை எம்.ஜி.ஆர் காலத்திலேயே out of fashion ஆகி போன ஒரு பழைய கதையை எந்த வித புதிய திரைக்கதை நுட்பங்களுமின்றி பிரம்மாண்டம் என்னும் போர்வையை போர்த்தி எடுத்துள்ளனர்.அரங்கம் அதிரும் அளவுக்கு வரும் இடைவேளைக்காட்சியில்தான் ராஜமௌலி நினைவுக்கு வந்தார். 

இடைவேளைக்கு பின்னர் கதை முடிச்சுக்கள் விடுவிக்கப்படுவதிலாவது புதிதாக ஏதாவது இருக்கும் என நினைத்தது எனது தவறுதான்.இதற்கு பின்னரும் கூட மேலோட்டமாகவே கதை பயணிக்கிறது. கண்டிப்பாக திரைக்கதை நன்றாக எழுதப்படவில்லை,கதாபாத்திரங்களின் ஆழமும் கூட போதவில்லை.இதனால் அருமையான காட்சிகள்  பல இருந்தும்  ரசிக்க முடியவில்லை. திரைக்கதையை ஒரு ஓரமாக வைத்து விட்டு காட்சிப்படுத்தலுக்கு வருவோம்.

ஆரம்பம் முதல் அற்புதமான பல காட்சிகள் உள்ளன.மதம் கொண்ட யானையை அடக்குவதாகட்டும் யுவராணி தேவசேனாவின் நாட்டில் நடக்கும் போர் ஆகட்டும் பறக்கும் ரத பாட்டாகட்டும் அத்தனையுமே ஈர்க்கின்றன.அதிலும் பெண்களை தொடுபவனுக்கு பாகுபலி தரும் தண்டனை இருக்கிறதே,மெய் சிலிர்த்து நான் பார்த்த காட்சிகளுள் அதுவும் ஒன்று.

இசை,பாடல்கள் ஒரு துளி கூட ஈர்க்கவில்லை.ஆரம்பத்தில் தாலாட்டு பாடல் ஒன்று வருகிறது(எனக்கு எழுந்து ஓடிவிடலாமா 
எனத்தோன்றியது),தருணத்திற்கு ஏற்ற பாடலாக அது தோன்றவில்லை.இவ்வாறே ஏனைய பாடல்களும் உள்ளன.பறக்கும் ரதத்தை ரசித்தாலும் பாட்டை ரசிக்க முடிவதில்லை,அத்தோடு அந்த பாடல்தான் இருப்பதிலேயே கொஞ்சம் சுமாரான பாடலும் கூட.பிண்ணனி இசையில் ஆங்காங்கே ரசிக்கும்படியான கோரஸ்களாளான இசை காதுகளுக்கு விருந்தளிக்கிறது.மரகதமணி இந்த பாகத்தில் தன் முந்தைய இசைக்கு அருகாமையில் கூட செல்ல முடியாமல் திணறுவது இசை பிரியனான எனக்கு நன்றாவே விளங்குகிறது.ஒருவேளை பிண்ணினி இசையில் கவனம் செலுத்துகிறேன் என பாடல்களை அவசரகதியில் கம்போஸ் செய்திருக்கக்கூடும்.

நடிகர்கள் அனைவருமே தங்களது பாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்.பிரபாஸ்,நடிக்க வேண்டிய சிற்சில இடங்களில் இலேசாக தடுமாறுகிறார்.பருந்து கொண்டு வரும் செய்தியை வாங்கி படித்தவுடன் அவர் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்கள்,தடுமாற்றம் தனியாக தெரியும்.அனுஷ்கா,ரம்மியா கிருஷ்ணன்,நாசர்,ராணா அனைவருமே போட்டிபோட்டு நடித்துள்ளனர்.அதிலும் கட்டப்பாவாக வரும் சத்தியராஜ் படத்தின் பெயரை Bahubali:The Rise of Kattapa என மாற்றியிருக்கலாம் என்னும் அளவிற்க்கு தூள் கிளப்புகிறார்.1980களில் இவர் கையாண்ட பல முகபாவனைகளை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்.அவை தனித்து வேறாக தெரிகிறது.என்றாலும்  அது எனக்கு பிடித்திருந்தது.
ஆம்,தமன்னாவும் இந்த படத்தில் இருக்கிறார்.இதில் புதியதாக குமாரவர்மன் என்னும் முக்கியமானதொரு கதாபாத்திரம் இணைக்கப்பட்டுள்ளது.ஆரம்பம் முதலே நன்றாக எழுத்தப்பட்ட அந்த கதாபாத்திரம் இறுதியில் சறுக்கி விழுந்தது வேதனையளிக்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகளில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் எனக்கு திருப்தியாகத்தான் இருந்தது.டப்பிங் நிறைய இடங்களில் சின்ங் ஆக மறுத்தது கண்கூடு.அடுத்தது என்ன என்ன என்பதை(கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை கூட) இலகுவாக கணித்துவிடமுடிகிறது.முதலிலேயே சொன்னது போல் உயிரோட்டமில்லாத திரைக்கதையால் முழுபடத்தையுமே திருப்தியாக ரசிக்க முடியவில்லை.

பல தருக்க மீறல்களும் இல்லாமல் இல்லை.30000பேர் கொண்ட,நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட படையை சில நூறு பேர் எதிர்த்து வெற்றியும் பெறுகிறார்கள் அதுவும் போதிய ஆயுதங்களும் திட்டமிடல்களும் இன்றி.ஃப்ளாஷ்பேக்கிலேயே கட்டப்பாவுக்கு 60 வயது என கூறுகிறான் பாகுபலி.ஆனால் பாகுபலியின் மகனுக்கு 25 வயது ஆன பின்னரும் கூட கட்டப்பா அப்படியேதான் இருக்கிறார்(நாசருக்கும் வயதாகவில்லை).பாகுபலியின் நெற்றி திலகத்தை கொண்டே அவன் அரச குலத்தை சேர்ந்தவனா இல்லையா என இலகுவாகக் கண்டறிந்திருக்கலாம்,ஆனால் தேவசேனா இதையெல்லாம் செய்யாமல் வசனங்களை மாத்திரம் பேசிக்கொண்டேயிருக்கிறார்.
இதே போல் பல தருக்க மீறல்கள் படம் முழுவதும் பரவி கிடக்கின்றன.

ஆக நல்ல திரைக்கதையை தேடுபவர்களுக்கு ஏமாற்றமாகவும் பிரமாண்டம் தேடுபவர்களுக்கு  திருப்தியாகவும் தோன்றும் இந்த பாகுபலி

பாகுபலி பிரமாண்டம் மட்டுமே..!

2 comments:

//]]>